இது அவுட் இல்லையா? கடுப்பான கோலி! ஸ்டம்ப் மைக்கில் போய் 3-வது நடுவரிடம் கத்திய வீடியோ
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 11-ஆம் திகதி துவங்கியது.
இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா அணி 210 ஓட்டங்களும், அதன் பின் 13 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 198 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, தென் ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 212 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சற்று முன் நான்காம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Virat Kohli walked up to the stumps and said: "Focus on your team as well and not just the opposition. Always trying to catch people". Virat Kohli speaking right into the stump mic indicating that the DRS is definitely rigged to favour South Africa. #INDvsSA #ViratKohli pic.twitter.com/oGF13DeGoZ
— Avish Sidhwani (@SidhwaniAvish) January 14, 2022
இந்நிலையில், இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் 22 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அஷ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபில்யூ ஆனார்.
இதற்கு கள நடுவர் அவுட் கொடுக்க, அதன் பின் டி.ஆர்.எஸ் சென்ற போது அது அவுட் இல்லை, பந்து ஸ்டம்பிற்கு மேல்சே செல்வது போன்று காட்டப்பட்டது. மூன்றாவது நடுவரின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் வீசிய அந்த பந்து அவ்வளவு உயரமாக செல்ல வாய்ப்பே கிடையாது என்று இந்திய வீரர்கள் அனைவரும் கோபப்பட்டனர்.
இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ஸ்டம்பிற்கு அருகில் சென்று குனிந்தவாறு உங்கள் அணியினரும் அவ்வப்போது பந்தை சேதப்படுத்துகின்றனர்.
அதையும் கொஞ்சம் பாருங்கள் எதிரணியை மட்டும் பார்க்க வேண்டாம். எப்போதும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அஸ்வின், மிகப்பெரிய போட்டிகளில் வெல்ல வேண்டும் என்றால் வேறு நல்ல வழி இருந்தால் பாருங்கள் என்று கூறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.