டோனி பற்றி டுவிட் போட்டு உடனே நீக்கிய கோலி! தெரியவந்த உண்மை காரணம்
பெங்களூரு அணியின் தலைவரான கோலி, சென்னை அணியின் வெற்றிக்கு பின் டோனி பற்றி டுவிட் பதிவிட்டு, அதன் பின் உடனே நீக்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.
இப்போட்டியில் கடைசி கட்டத்தில் டோனி சிறப்பாக ஆடி 6 பந்தில் 18 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
டோனி ஒரு இக்கட்டான நேரத்தில், சிறப்பாக போட்டியை பினிஷிங் செய்து கொடுத்ததால், அவரை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.
அதன் படி பெங்களூரு அணியின் கேப்டனும், இந்திய அணியின் தலைவருமான கோலி அந்த போட்டி முடிந்த சில நிமிடங்களிலே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கிங் இஸ் பேக், மிகச் சிறந்த பினிஷர் டோனி தான், இரவும் என்னை சீட்டின் நுனியில் இருந்து குதிக்க வைத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை டோனி ரசிகர்கள் உடனே டிரண்ட் ஆக்கினர்.
Virat Kohli deleted his previous tweet just because of he did not add "Ever" (MS Dhoni Greatest Finisher Ever in the game). - Shows The Purest Bond In Cricket, The mutual Respect. pic.twitter.com/Z2ZRmi52wP
— CricketMAN2 (@man4_cricket) October 10, 2021
ஆனால் இந்த டுவிட்டிக்கு முன் கோலி, கிரேட்டஸ்ட் பினிஷர் என்று பதிவிட்டு உடனே நீக்கினார்.
ஏனெனில், எவர் என்ற வார்த்தையை விட்டு விட்டதன் காரணமாக மீண்டும் தி கிரேட்டஸ்ட் பினிஷர் எவர் என்று சேர்த்து மீண்டும் அந்த பதிவினை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.