அந்த ஒரு விக்கெட் போனவுடனே உடைந்து போன கோலி! வைரலாகும் புகைப்படம்: கலங்கும் ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கோலி ஒரு வித ஏமாற்றத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படம், பெங்களூரு ரசிகர்களை கலங்க வைத்து வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் தோல்வியடையும் அணி, அப்படியே தொடரை விட்டு வெளியேற வேண்டியது தான், வெற்றி பெறும் அணி, டெல்லியுடன் மோதி, அதன் பின் அதில் வென்றால் இறுதிப் போட்டியில் சென்னையை எதிர்கொள்ளும்.
இந்நிலையில், டாஸ் வென்று முதலில் ஆடிய பெங்களூரு அணி, சுனில் நரைனின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.
குறிப்பாக இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோலி, டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வேல்ஸ் ஆகியோரின் விக்கெட்டை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் எடுத்தார்.
இதில் கோலி, டிவில்லியர்ஸ் அவுட் ஆன பின்பு, பெங்களூரு அணியின் கடைசி நம்பிக்கை நட்சத்திரமாக மேக்ஸ்வேல்ஸ் இருந்தார், ஆனால் அவரை சுனில் நரைன் தன்னுடைய மாயாஜால பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கியதால், இதைக் கண்ட கோலி, அப்படியே ஒரு வித ஏமாற்றத்துடன் தலையை கீழே குணிந்தபடி உட்கார்ந்திருந்தார்.
கோலிக்கு இது தான் ஐபிஎல் தொடரில் கடைசி கேப்டன், கோலி அடுத்த ஐபிஎல் தொடரில் நான் கேப்டனாக இருக்க போவதில்லை, என்று அறிவித்துவிட்டார்.
இதனால் இந்த முறை எப்படியும் கோப்பையை பெங்களூரு தட்டிவிடும் என்று எதிர்பார்க்கும் போது, பெங்களூரு அணியின் பேட்டிங் மோசமாக அமைந்துவிட்டதால், பவுலிங்கில் ஏதேனும் ஒரு மிராக்கிள் நடக்க வேண்டும் என்று கோலியின் இந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் கலங்கி வருகின்றனர்.