நாவூறும் சுவையில் அம்மணி கொழுக்கட்டை.., இலகுவாக செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொழுக்கட்டையை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் அம்மிணி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இடியப்பம் மாவு- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- உளுந்து பருப்பு- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- தேங்காய்- ¼ கப்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- வெங்காயம்- 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு, சிறிதளவு எண்ணெய், உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து நன்கு பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மாவை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் கடலை பருப்பு, உளுந்து பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் சேர்த்து அரைத்து பின் தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
இறுதியாக இதில் வேகவைத்த உருண்டை மற்றும் அரைத்த மசாலா கலவை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அம்மணி கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |