இன்னும் சில மாதங்களில்... உக்ரைன் போரால் உலக நாடுகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு: ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
உக்ரைன் போர் உலகப் பிரச்சினையாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.
G-7 தூதர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திய ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் பலவற்றிற்கு தானியங்கள் விநியோகிக்கும் உக்ரைனிலிருந்து தானியங்கள் வெளியே வர முடியாமல் சிக்கியிருப்பதாகவும், தானியங்களை வெளியே கொண்டு வருவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கவில்லையானால், சில மாதங்களுக்குள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள சுமார் 50 மில்லியன் மக்கள் பசியால் வாட இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா வேண்டுமென்றே உக்ரைனுக்கு எதிரான போரை இழுத்தடிப்பது என முடிவு செய்துள்ளது. அதை உலக நாடுகள் பலவற்றிற்கு எதிரான, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிரான இராணுவப் போர் அல்லது தானியப் போர் என்றும் சொல்லலாம் என்கிறார் அவர்.
நாம் அப்பாவியாக இருக்கக்கூடாது என்று கூறும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, இது இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடப்பதால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் பக்க விளைவு என்று கூறிவிட முடியாது. இது வேண்டுமென்றே முடிவு செய்யப்பட்ட ஒரு போர். ரஷ்யப் போருக்கெதிராக சர்வதேச நாடுகளின் ஒற்றுமையைக் வலுவிழக்கச் செய்வதற்கான புதிய சிக்கல்களுக்காக ரஷ்யா இடம் உருவாக்கி வருகிறது என்று கூறியுள்ளார்.