ஜேர்மனி மீது உக்ரைன் பயங்கரவாத தாக்குதல்: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
ஜேர்மனி, கஜகஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
டிமித்ரி பெஸ்கோவ்
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், மாஸ்கோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் விவகாரத்தை அமெரிக்கர்கள் கைவிடவில்லை என்றும், அவர்கள் அதிக முன்னுரிமை உள்ள பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் ஜேர்மனி, கஜகஸ்தான் மற்றும் ஈரான் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
2022-யில் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்களில் நடந்த வெடிப்புகளை மேற்கோள் காட்டிய அவர், அவற்றை உக்ரைன் மீது குற்றம்சாட்டி ஜேர்மனிக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் என்று கூறினார்.
காஸ்பியன் பைப்லைன்
அத்துடன் "உக்ரைனின் ஆட்சி அதன் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்வதை நாங்கள் காண்கிறோம். மேலும், நாம் பின்னோக்கிப் பார்த்தால், உக்ரைன் ஆட்சி அதன் பயங்கரவாத நடவடிக்கைகளின் புவியியலைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது" என தெரிவித்தார்.
அதேபோல், கஜகஸ்தான் பங்குதாரராக உள்ள காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மற்றும் காஸ்பியன் கடலில் ஒரு ஈரானியக் கப்பல் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்; அந்தத் தாக்குதலை ஈரான் மீதான தாக்குதல் என்றும் அவர் விவரித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |