அவன் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டான்! தந்தையான மகிழ்ச்சியில் இந்திய வீரரின் பதிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் க்ருணால் பாண்ட்யா தன்னுடைய குழந்தை தங்களது வாழ்க்கையை மாற்றிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான க்ருணால் பாண்ட்யா ஆண் குழந்தைக்கு தந்தையானார்.
அதனைத் தொடர்ந்து இந்திய மொடலும், அவரது மனைவியுமான பன்குரி சர்மா மற்றும் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை க்ருணால் வெளியிட்டார். அத்துடன் தங்கள் குழந்தைக்கு கவிர் பாண்ட்யா என பெயரிட்டார்.
குழந்தைக்கு அவர் ஆசையுடன் முத்தமிடும் புகைப்படம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெற்றோருக்கான பயணத்தில் உற்சாகமாக இருப்பதாக க்ருணால் பாண்ட்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், 'பன்குரியும், நானும் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் நாங்கள் பெற்றோருக்கான எங்கள் பயணத்தில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். கவிர் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டான் மற்றும் நாங்கள் முற்றிலும் காதலில் மூழ்கியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
Pankhuri and I are grateful for all the blessings and wishes and we're super excited about our journey into parenthood. Kavir has changed our lives and we're absolutely in love ❤️ pic.twitter.com/tv2oIJoqst
— Krunal Pandya (@krunalpandya24) July 26, 2022