டோனி இருந்தவரை அவர் சூப்பரா விளையாடினார்! ஆனால் இப்போ கஷ்டம் தான்: மைக்கல் வாகன் ஓபன் டாக்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், டோனி இருந்தவரை சிறப்பாக விளையாடியதாகவும், இனி அவரின் கிரிக்கெட் வாழ்க்கை கஷ்டம் தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
இந்திய அணியின் சிறந்து சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில், சில ஆண்டுகளுக்கு முன்பு குல்தீப் யாதவ் இருந்தார். அந்தளவிற்கு சிறப்பாக பந்து வீசி, எதிரணி வீரர்களை மிரட்டி வருவார்.
ஆனால், சமீப ஆண்டுகளாக அவரது பார்ம் மிகவும் கேள்வி குறியாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குல்திப் யாதவ் சரியாக பந்துவீச காரணத்தினால் மூன்றாவது போட்டியில் உட்கார வைக்கப்பட்டார்.
இதில் சரியாக விளையாடத காரணத்தினால் இந்த ஐ.பி.எல் தொடரிலும் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், டோனி இருந்த வரையில் அவரது ஆலோசனைகளை சரியாக பெற்று சரியான விதத்தில் பந்தை சுழற்றி எதிரணி பேட்ஸ்மேன்களை குல்தீப் யாதவ் திணறடித்து வந்தார்.
இப்போது டோனி இல்லாத காரணத்தினால் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. ஒரு இடது கை பந்து வீச்சாளர் பந்தை அவ்வப்போது வேகமாகவும், வேகம் அல்லாமலும் லைன் மாற்றி பேட்ஸ்மேன் ஆடும் இடத்துக்கு ஏற்ப பந்தை சுழற்றி கொண்டு வர வேண்டும்.
ஆனால் குல்தீப் யாதவ் சமீப காலங்களாக ஒரே மாதிரியே பந்து வீசி வருகிறார். புதிதாக எந்த விதமான பந்துகளும் அவரிடத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை.
இது பந்து வீச்சாளரிடம் நிச்சயம் இருக்கக் கூடாத விஷயம் ஆகும்.
குல்தீப் யாதவை பார்க்கையில், தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வார் என எனக்குத் தோன்றவில்லை. அவர் ஒரே இடத்தில் தான் தற்போது வரை இருக்கிறார். என்னை பொறுத்தவரை அவரது கிரிக்கெட் எதிர்காலம் கஷ்டம் என்றே கூறியுள்ளார்.