அமெரிக்காவில் 21 வயது இந்திய இளைஞர் சுட்டுக்கொலை! நடந்தது என்ன? வெளியான சிசிடிவி காட்சி
அமெரிக்காவில் 21 வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த குலதீப் சிங் (21) அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் 'uber' கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 4) அவர், இரவு 10 மணியளவில் எட்டாவது அவென்யூ மற்றும் வெஸ்ட் 131வது வீதி வழியாக சவாரிக்கு சென்றிருந்தபோது, 15 வயது சிறுவனால் துப்பாக்கியால் தலையில் சூடுப்பட்டார்.
அந்த காரில் இருந்த மற்றோரு இளைஞர் அந்த 15 வயது சிறுவனை திருப்பி சுட்டதாக கூறப்படுகிறது. குலதீப்பின் காரில் பயன் செய்த நபர்களும், அந்த 15 வயது சிறுவனும் ஒரு கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து இந்த துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் குண்டடி பட்ட குல்தீப் சிங் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்துவிட்டார்.
காயம்பட்ட அந்த 15 வயது சிறுவனும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் தலைமறைவாக உள்ளார், மேலும் இது தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.