பழங்குடியினர் முகாமில் 5 வயது சிறுமியை கொன்ற கொடூரன்: கண்டெடுக்கப்பட்ட பொருள்
அவுஸ்திரேலியாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பழங்குடியினர் நகர முகாமில்
அவுஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் அருகே, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி ஒரு பழங்குடியினர் நகர முகாமில் இருந்து 5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர் ஐந்து நாட்கள் நீடித்த பரவலான தேடுதலுக்குப் பிறகு, வியாழக்கிழமை அன்று டாட் ஆற்றின் கரைகளுக்கு அருகில் உள்ள புதர்காட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, 47 வயதான ஜெபர்சன் லூயிஸ் என்பவர் மீது ஞாயிற்றுக்கிழமை அன்று கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அந்நபர் பழங்குடியினர் முகாமில் வசிப்பவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
கைவிடப்பட்ட குழந்தை வண்டி
இந்த நிலையில், லூயிஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை வண்டியும், இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் யூனிகார்ன் பொம்மையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் லூயிஸுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவியாளர்கள் பயன்படுத்திய கட்டுத்துணிகள், ரப்பர் கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் அந்த இடத்தில் சிதறிக் கிடந்தன.
இதற்கிடையில், லூயிஸ் செவ்வாய்க்கிழமை அன்று காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |