சஞ்சு சாம்சன் அப்படி செய்ததில் எந்த தப்பும் இல்லை! ஆதரவு கொடுத்த இலங்கை ஜாம்பவான் சங்ககாரா
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், சஞ்சு சாம்சன் செய்த செயலுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், குமார் சங்ககாரா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம் ஆட்டத்தில் கோஹ்லியின் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் பெங்களூரு அணி நிரண்யித்த 222 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தான் அணி கடைசி கட்டத்தில், வெறும் நான்கு ஓட்டத்தில் தோல்வியடை சந்திதது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆன, சஞ்சு சாம்சன் சதம் அடித்து களத்தில் இருந்தார்.
ஆனால் அவர் கடைசி கட்டத்தில் செய்த செயல் தான் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்தில் ராஜஸ்தான் அணிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் அதிரடியாக விளையாடிய சதம் அடித்து நின்று கொண்டிருந்த சாம்சன், ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். அது பவுண்டரி செல்லும் என்று எதிர்பார்த்த போது, ஆனால் அது பவுண்டரி செல்லவில்லை, சஞ்சு சாம்சனும் ஓடாமல் கிரிஸ் உள்ளே நிற்க, மறுமுனையில் இருந்த கிறிஸ் மோரிஸ் கிரிஸ் வந்து மீண்டும் திரும்பினார்.
இதனால் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயம். அதே போன்று சஞ்சு சாம்சனும் தூக்கி அடித்தார். ஆனால் சிக்ஸர் லயனில் கேட்ச் ஆக, ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. சஞ்சு சாம்சன் முன்னர் பந்தில் ஓடியிருந்தால், மோரிஸ் கூடி அடித்திருப்பார் என்று சர்ச்சைகள் எழ, சஞ்சு சாம்சனின் இந்த முடிவு சரி என்று சங்ககாரா கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், வெற்றிக்கு மிக அருகில் வரை ராஜஸ்தான் அணியை அழைத்து வந்த சஞ்சு சாம்சன் தானே போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என நினைத்திருப்பார்.
கடைசி பந்திலும் அவர் அடித்தது கிட்டத்தட்ட பவுண்டரி லைன் வரை சென்றுவிட்டது.
போட்டியின் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியால் கடைசி நேரத்தில் சஞ்சு சாம்சன் தானே போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என நினைத்ததில் எந்த தவறும் இல்லை. நான் சஞ்சு சாம்சனின் இந்த முடிவை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.