முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்தவர் குமார் சங்கக்கார(Kumar sangakkara).
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல வழக்கறிஞருமான க்ஷேமா சங்கக்கார(Kshema Sangakkara) இன்று மதியம் காலமாகியுள்ளார்.

க்ஷேமா சங்கக்கார, குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை வழி நடத்தியுள்ளார்.
1983 ஆம்ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்தின் போது, க்ஷேமா சங்கக்காரவும் அவரது மனைவி குமாரியும், 35 தமிழர்களுக்கு மிகுந்த ஆபத்தில் ஏங்கல்டைன் காட்டேஜில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
க்ஷேமா சங்கக்காரவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
க்ஷேமா சங்கக்காரவின் இறுதிச் சடங்குகள், மார்ச் 4, 2026 அன்று மாலை 6.00 மணிக்கு கண்டியில் உள்ள மஹைய்யாவா மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |