அது விளிம்பில் உள்ளது.,பார்க்க மிகவும் நம்ப முடியாதது: குமார் சங்ககாராவின் பதிவு
WTC இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா விளையாடுவதை பார்ப்பதற்கு நம்ப முடியாத வகையில் உள்ளதாக இலங்கையின் குமார் சங்ககாரா பதிவிட்டுள்ளார்.
சங்கக்காரா
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை நெருங்கி விளையாடி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் இப்போட்டியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா தென் ஆப்பிரிக்க அணியின் செயல்பாட்டை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "விளிம்பில் உள்ளது. என்ன ஒரு கதையாக இருக்க முடியும். தென் அப்பிரிக்காவிடம் இருந்து திறமை மற்றும் அன்பை பார்ப்பது மிகவும் நம்ப முடியாதது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |