கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தை காட்டுவதற்கான இடம் அல்ல! குஷ்பு
கல்வி நிறுவனங்கள் உங்களது மதத்தைக் காட்டுவதற்கான இடம் அல்ல என பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு டுவிட் செய்துள்ளார்.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவம் நாடளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது.
பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே, இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம்.
Education is not about religion, it’s about equality. I believe n am for wearing a uniform in school. The rules are n should be the same for all. Educational institutions are not to showcase your religion, but to show your strength as an Indian. Shame on those who play politics.
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 9, 2022
நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம்.
என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. அப்போது யாரும் குறை கூறவும் இல்லை.
உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா? என்று தெரிவித்துள்ளார்.
Let us be as we use to be in our school days,as one. I didn’t see any child wearing anything else but a uniform in my school days. Not even when my kids were in school. No one complained. Why this sudden urge to wear your religion as your badge to school?Don’t schools have rules?
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 9, 2022