இந்த இரண்டு பேர் மட்டும் தான் சிறந்த வீரர்கள் ஆவார்கள்! கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா கணிப்பு
தன்னுடைய சமகாலத்தில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் சிறந்த இருவர் யார் என ஜாம்பவான் பிரைன் லாரா கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் லாரா கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்த 400 ரன்கள் என்ற சாதனையை இன்று வரையிலும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.
அவர் அளித்த பேட்டியில், கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்டு ஒருவரை என்னால் கூறிவிடமுடியாது ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்ப சிறந்த வீரர்களை நான் கூறுகிறேன்.
முதலில் டான் பிராட்மேன் அவர்களை விளையாடிய காலகட்டத்தில் அவர்தான் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அதேபோல அவருக்குப் பின்னராக விளையாடிய வீரர்களை எடுத்துப்பார்த்தால், சர் கேரி சோபர்ஸ் மற்றும் சார் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர் தன்னுடைய சமகாலத்தில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்றும் அதேபோல காலீஸ் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் லாரா கூறியுள்ளார்.