அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார் லசித்மலிங்கா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை அணி வீரரான லசித் மலிங்கா அனைத்து விதமான டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் தன்னுடைய யார்க்கர் மூலம், எதிரணியை கதிகலங்க வைத்தவர் இலங்கை வீரர் லசித் மலிங்கா. ஆனால், காலம் செல்ல, செல்ல இவருடைய பந்தை அசால்ட்டாக எதிர் கொண்ட பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதன் காரணமாக அணியில் கிடைக்காமல் தவித்து வந்த மலிங்கா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், அதன் பின் ஐபிஎல் தொடர் போன்ற வெளிநாட்டில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வந்தார்.
தற்போது டி20 உட்பட அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து மலிங்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
அதே சமயம் விளையாட்டின் உணர்வை மேம்படுத்தும் இளைய தலைமுறையினருக்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன், விளையாட்டை விரும்பும் அனைவருடனும் நான் எப்போதும் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.