இசையில் கொடிகட்டி பறந்த லதா மங்கேஷ்கர் மலையாளத்தில் ஒரே ஒரு பாடல் பாட காரணம் என்ன?
தனது மந்திரக்குரலால் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் மெலடி குயின் லதா மங்கேஷ்கர். 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதியில் பிறந்த இவர், சுமார் 60 ஆண்டுகள் இந்திய இசைத்துறையில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் 36 பிராந்திய மொழிகளில் பாடியுள்ளதையடுத்து தாதா சாஹிப் பால்கே விருது முதல் சினிமாத்துறையின் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா எனும் கொடூர அரக்கனிடம் சிக்கி 28 நாள் போராட்டத்திற்கு பிறகு கானக்குயில் லதா மங்கேஷ்கர் நேற்று காலை அகால மரணம் அடைந்தார்.
திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்த லதா மங்கேஷ்கர், பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடிய நிலையில் மலையாள சினிமாவில் ஒரே பாடலை மட்டும் தான் பாடியுள்ளார். 1974இல் ராமு காரியத் இயக்கத்தில் வெளியான நெல்லு என்கிற படத்தில் இடம்பெற்ற கதலி செங்கதலி என்கிற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு முன்னதாக செம்மீன் படத்தில் லதா மங்கேஷ்கரை பாட வைக்க இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி முயற்சித்தார். ஆனால் அது ஒரு சில காரணங்களால் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெயபாரதி கூறியதாவது, அந்த பாடல் எடுக்கப்பட்ட போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படவில்லை. ஆனால் 20 வருடம் கழித்து தான் அந்த பாடலின் உண்மையான பெருமை புரிந்தது.
என் வாழ்க்கையில் அவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.