தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

Government of Tamil Nadu Money
By Karthikraja Jun 18, 2026 12:57 PM GMT
Report

தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள விஜய்யின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தமிழன்.

இந்த படத்தில், இந்தியாவின் வெளிநாட்டு கடன் காரணமாக தனிநபர் கடன் ரூ.4,000 உள்ளதால், ரூ.4,000 த்தை விஜய் இந்திய பிரதமருக்கு அனுப்புவதாகவும், அவரை பின்பற்றி பலரும் இந்தியாவின் கடனை அடைக்க பணம் அனுப்புவதாவும், இதனால் இந்தியாவின் கடன் பாதியாக குறைந்தது போன்று காட்சி வைக்கப்பட்டிருக்கும்.

தற்போது அதே போல், தமிழ்நாடு அரசின் கடனை அடைக்க வழக்கறிஞர் ஒருவர் ரூ.1.28 லட்சத்திற்கு காசோலை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கடன்

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் இரு நாட்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். 

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் | Lawyer Paid 1 28 Lakhs To Tn Govt Per Capita Debt

இதில், தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு ரூ13.18 லட்சம் கோடியாக உள்ளது எனவும், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.67,087 ஆக இருந்த தனிநபர் மீதான கடன், 2025-26 ஆண்டில் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அரசு கடனை அடைக்க ரூ.1,28,934 வழங்கிய வழக்கறிஞர்

இதனைத்தொடர்ந்து, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரியாஸ் அகமது என்பவர் தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் AI அமைச்சர் குமாரை சந்தித்து, தனது பங்களிப்பாக ரூ.1,28,934 தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார். 

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் | Lawyer Paid 1 28 Lakhs To Tn Govt Per Capita Debt

இதுதொடர்பாக, முதல்வர் விஜய்க்கு கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார். அதில், ''நம் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை நேற்று (16.06.2026) வெளியிடப்பட்டதில், தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 என்பதை நான் அறிந்தேன்.

இதில் எனது பங்களிப்பாக ரூ.1,28,934 அளிக்கின்றேன். எனவே என் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். 

அரசு யாரிடமிருந்து கடன் பெறுகிறது?

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பல லட்சம் கோடிகள் கடன் உள்ளது. கடன் இல்லாமல் அரசை நடத்த முடியாது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, அரசு லாபநோக்கில் செயல்படாமல், சேவை நோக்கில் செயல்பட கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கும்.

தமிழ்நாடு அரசு, உள்நாட்டு கடன், நேரடியாக தனது குடிமக்களிடம் இருந்தும், தனது ஊழியர்களிடமிருந்தும் கடனாகப் பெறும் Public Account Liabilities, மத்திய அரசிடம் பெறப்படும் நேரடிக் கடன் என 3 வழிகளில் கடன்களை திரட்டுகிறது.

இதில், சுமார் 80% வரை உள்நாட்டு கடன்கள் ஆகும். தமிழ்நாடு அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மூலம் 'மாநில மேம்பாட்டுக் கடன்கள்' எனப்படும் கடன் பத்திரங்களை சந்தையில் வெளியிடுகின்றன.

இந்த கடன் பத்திரங்களை பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை வாங்குகின்றன. வங்கிகளிலும், ஆயுள் காப்பீடு திட்டங்களிலும் சேமிக்க, முதலீடு செய்வதற்கு போட்ட பணத்தை, வங்கி உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. நபார்டு வங்கி போன்றவற்றில் இருந்தும் சிறு அளவிலான தொகை கடனாக பெறப்படுகிறது.

Public Account Liabilities என்பது, பொதுமக்களின் அஞ்சலக சேமிப்புகள், அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவை அடங்கும். இதில், அரசு வட்டியுடன் அசலை திருப்பி வழங்கும்.

3வதாக மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் மற்றும் சில சிறப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு கடன் பெறும்.

இவ்வாறாக மக்களின் வங்கி சேமிப்பும், அஞ்சலகச் சேமிப்புகளும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்தையும் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், அரசின் கடன் பாத்திரங்களில் முதலீடு செய்து கடன் வழங்குகின்றன. அரசு தனது வரி வருவாயில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வட்டியாக அந்த நிதி நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குகிறது.

இந்திய அரசும், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களும் இவ்வாறே கடன் பெறுகின்றன. இந்திய அரசு 'G-Secs' என்ற பெயரிலும், மாநில அரசுகள் 'SDLs' என்ற பெயரிலும் ரிசர்வ் வங்கி மூலமாக மக்களின் சேமிப்பையே கடனாகப் பெற்று நிதித் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US