பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் Le Pen போட்டியிடலாம்: நிதி முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்
ஐரோப்பிய ஒன்றிய நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக Marine Le Pen மீது விதிக்கப்பட்ட தண்டனையை பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது; ஆனால், அவரது தண்டனைக் காலத்தைக் குறைத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில்
இதனால், ஏப்ரல் 2027 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அரசாங்கப் பதவிகளை வகிப்பதற்கான ஐந்தாண்டு காலத் தடை குறைக்கப்பட்டுள்ளதுடன், அது மார்ச் 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, தண்டனையை ஏற்கனவே அனுபவிக்கப்பட்டுவிட்டதாகக் கருதுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும், தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) கட்சியின் தலைவருக்கு, மின்னணு கணுக்கால் கண்காணிப்புக் கருவியை அணிந்தபடி ஓராண்டு வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கண்காணிப்புக் கருவியை அணிந்தபடி ஓராண்டு வீட்டுக் காவல் தண்டனை என்பது அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாகத் தடுத்துவிடாது.
இந்த நிலையில், மின்னணு கண்காணிப்புக் கருவியை அணிய வேண்டியிருந்தால், பிரச்சாரம் செய்வதற்கு முழுமையான சுதந்திரம் இருக்காது என்பதால், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று Le Pen பலமுறை கூறி வந்துள்ளார்.
இதனிடையே, தனது முடிவில் அவர் உறுதியாக இருக்கிறாரா அல்லது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஜோர்தான் பர்தெல்லாவுக்கு அளிப்பாரா என்பது தொடர்பில் Le Pen உடனடியாக அறிவிக்க இருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், Le Pen கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று முறை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு, மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லாத இமானுவல் மேக்ரானிடம் தொடர்ச்சியாக இரண்டு முறை தோல்வியடைந்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு அளித்த தனது கடைசி தொலைக்காட்சி நேர்காணலில், Le Pen, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது நிபந்தனைகளை நீதிபதிகளுக்கும் பொதுமக்களுக்கும் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
கண்காணிப்புக் கருவி
மின்னணு கண்காணிப்புக் கருவியை அணிய வேண்டியிருந்தால் கண்டிப்பாக தாம் ஜனாதிபதி பதவிக்காகப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள நீதிமன்ற தீர்ப்பானது, Le Pen தற்போது எதிர்கொள்ளும் மூன்றாண்டு சிறைத்தண்டனையில், இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகவும், ஓராண்டு மின்னணு கண்காணிப்புக் கருவியை அணிய வேண்டியதாகவும் அமைகிறது.
மேலும், நல்லொழுக்கத்தின் அடிப்படையில், மின்னணு கண்காணிப்புக் கருவியை அணிய வேண்டிய ஓராண்டு கால அவகாசத்தைக் குறைக்குமாறு Le Pen கோரக்கூடும்.

நீதிமன்றங்கள் அதற்கு ஒப்புக்கொண்டால், அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவது மட்டுமின்றி, ஏப்ரல் 18 மற்றும் மே 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் இரு சுற்றுத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், கண்காணிப்புக் கருவியை அணிந்துகொண்டு எலிசீ அரண்மனைக்குள் நுழைவதையும் தவிர்க்க முடியும்.
வெளியாகியுள்ள தீர்ப்பில் அரசாங்கப் பதவிகளை வகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அது தற்போது அவரைப் பாதிக்காது. அவருக்கு விதிக்கப்பட்ட 45 மாத கால சிறைத்தண்டனையில் பெரும்பகுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; 2025 மார்ச் 31 அன்று அவர் தண்டிக்கப்பட்டதிலிருந்து, நிறுத்தி வைக்கப்படாத 15 மாத கால தண்டனையை அவர் ஏற்கனவே அனுபவித்துவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |