இனி யாருக்கும் தெரியாமல் வெளியேறலாம்...வாட்ஸ்-ஆப் புதிய அறிமுகம்!
வாட்ஸ்-ஆப் குழுக்களில் இருந்து அமைதியாக வெளியேறும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-ஆப் நிறுவனம் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக வாட்ஸ்-ஆப் குழுக்களில் அரட்டை அடிக்கும் போது அதன் உரையாடல்கள் சில உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்களை அந்த குழுவில் இருந்து வெளியேற செய்து விடுகிறது.
இவ்வாறு அதன் குழு உறுப்பினர்கள் யாராவது வெளியேறுவது அந்த குழு உறுப்பினருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் இடையே மிகப்பெரிய உறவு விரிசலை சில சமயங்களில் எற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், வாட்ஸ்-ஆப் குழுக்களில் இருந்து அமைதியாக வெளியேறும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-ஆப் நிறுவனம் சோதித்து வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக WABetaInfo வெளியிட்ட தகவலில், வாட்ஸ்-ஆப்பில் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம் தொல்லைகள் தரும் வாட்ஸ்-ஆப் குழுவில் அதன் உறுப்பினர்களுக்கு தெரியாமல் வெளியேறும் அம்சத்தை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மலையில் செங்குத்தாக மோதிய சீன விமானம்: மிகப்பெரிய கொலை- தற்கொலை முயற்சி: பகீர் தகவல்!
ஆனால் இந்த வெளியேற்றத்தை சம்பந்தபட்ட குழுவின் நிர்வாகிகள் (admins)மட்டும் காணமுடியும் எனத் தெரிவித்துள்ளனர்.