இந்திய அணியின் சரிவிற்கு இந்த இலங்கை வீரரின் பந்துவீச்சு தான் காரணம்! தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு வந்த வீரரை புகழ்ந்து தள்ளும் சேவாக்
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வனிந்து ஹசங்க 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் பல அணிகளின் உரிமையாளர்களால் அழைப்பினை பெறுவார் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
சமீபத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கையின் இளம் வீரர் வந்து ஹசங்க சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக டி20 கிரிக்கெட் தரவரிசையில் மளமளவென முன்னேற்றி 2வது இடத்துக்கு வந்துள்ளார் ஹசங்க.
இந்த நிலையில் ஐபிஎல் உரிமையாளர்கள் இந்தியாவிற்கு எதிரான ஆட்டங்களுக்கு பிறகு ஹசங்காவை மாற்று வீரராக அணியில் இணைத்து கொள்ள கவனம் செலுத்தியுள்ளதாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஹசரங்க அருமையாக பந்துவிசினார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20யில் அவர் எடுத்த சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டுகள் மிக முக்கியமானவை. அதுதான் இந்திய அணியின் சரிவிற்கு காரணமாக இருந்தது.
ஹசரங்காவை ஐபிஎல்லில் எடுக்க சில அணிகள் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வந்துள்ளன. ஐபிஎல் நெருங்கிவரும் நிலையில், சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹசரங்க என கூறினார்.
குறிப்பாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே பிசிசிஐயிடம் அணுகி ஜாம்பாவுக்கு பதிலாக ஹசங்காவை அணியின் இணைத்து கொள்ள கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.