அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு; ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு, வழக்கை விசாரித்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளுக்கு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று தண்டனை விவரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |