செல்பி எடுக்கும் போது தாக்கிய மின்னல்! 60க்கும் அதிகமானோர் அடுத்தடுத்து உயிரிழப்பு... அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் மூன்று மாநிலங்களில் 60க்கும் அதிகமானோர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை உள்ளது. இங்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று மாலையில் மாநிலம் முழுவதும் அதீத மழை பெய்தது.
இந்நேரத்தில் பலர் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி அரண்மனை சுற்றுப்பகுதிகளை பைனாகுலர் மூலம் பார்த்து கொண்டிருந்ததோடு செல்பியும் எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கியது. இதில் 27 பேரில் 15 பேர் பலியாகினர். பலர் கோபுரத்தில் இருந்து குதித்ததில் காயமுற்றனர். பலியானவர்களில் சிறார்கள் 5 பேர் அடங்குவர். காயமுற்ற பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போல உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 41 ஆக உயர்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாகராஜின் சில பகுதிகளிலும் 14 பேர் தனித்தனியான மின்னல் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர்.
கான்பூர் தேஹத் மற்றும் பதேபூரில் தலா ஐந்து பேரும், கவுசாம்பியில் நான்கு பேரும், பிரோசாபாத்தில் மூன்று பேரும், உன்னாவ், ஹமீர்பூர் மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
கான்பூர் நகரில் தலா இரண்டு பேர் இறந்தனர், பிரதாப்கர் ஹர்தோய் மற்றும் மிர்சாபூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் ஏழு பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.