குழந்தையை சுமந்த கைகளில் குழந்தையின் சவப்பெட்டியை சுமக்கும் தந்தை... தாயால் குத்திக்கொல்லப்பட்ட குழந்தைக்கு இறுதிச்சடங்கு
பிரித்தானியாவில் பெற்ற தாயே தன் குழந்தைகள் இருவரை கத்தியால் குத்திய நிலையில், அவர்களில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த செவ்வாயன்று, வட அயர்லாந்தின் தலைநகரமான Belfastஇல் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொலிசார் வந்து பார்க்கும்போது, அந்த வீட்டுக்குள், பிறந்து எட்டு வாரங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றும் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
பிறகு, குழந்தைகளை கத்தியால் குத்தியது அந்த குழந்தைகளின் தாய்தான் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் பெயர் Raluca Tagani (29).
குழந்தைகளின் தந்தையான Liam மூன்று ஆண்டுகளுக்கு முன் ரொமேனியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு Ralucaவை சந்தித்திருக்கிறார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள, Liamஉடன் வாழ்வதற்காக Raluca வட அயர்லாந்துக்கு வந்திருக்கிறார். அவர் எதற்காக குழந்தைகளை கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், இன்று குழந்தை Liamக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. தன் அன்பு மகனை சுமந்த அதே கைகளால் தந்தை Liam மகனின் சவப்பெட்டியை சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கண்ணீருடன் அந்த தந்தை தன் குழந்தையின் சவப்பெட்டியை சுமந்து செல்லும் காட்சியைக் கண்டால் கல் மனமும் கரைந்துவிடும் போலிருக்கிறது.
குழந்தைகள் கொல்லப்பட்ட விடயம் Belfastஇல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், Raluca கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.