பிரபல கால்பந்து வீரர் மெஸ்சிக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரபல கால்பந்து வீரரான மெஸ்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், மெஸ்ஸி தற்போது பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணிக்கு விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அந்தணியில் உள்ள ஊழியர் ஒருவருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீரர்கள் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், லயோனல் மெஸ்ஸி, ஜூயன் பெர்னட், செர்ஜியோ ரிகோ மற்றும் 19 வயதான நேதன் பிடுமஸாலா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.