பிரபல கால்பந்து அணியுடன் மெஸ்ஸி ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! வெளியான முக்கிய தகவல்
பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறிய அர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியுடனான ஒப்பந்தம் இறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் என்று பார்சிலோனா கிளப் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 8ம் திகதி பார்சிலோனா கிளப் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மெஸ்ஸி, கண்ணீர் மல்க தான் பார்சிலோனா அணியை விட்டு வெளியேறுவதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் என்று கிளப் அறிவித்த நாள் முதல், அவர் PSG (பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்) அணியில் இணைவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நெற்று மெஸ்ஸி PSG-யுடன் ஒப்பந்தம் செய்ய பாரிஸ் வரவுள்ளதாக வதந்திகள் பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் பாரிஸ் விமான நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று மெஸ்ஸி-PSG இடையேயான ஒப்பந்தம் இறுதியானதாகவும், ஒரு சீசனுக்கு 35 மில்லியன் யூரோ என இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Lionel Messi joins PSG... HERE WE GO! Total agreement completed on a two-years contract. Option to extend until June 2024. Salary around €35m net per season add ons included. ???? #Messi
— Fabrizio Romano (@FabrizioRomano) August 10, 2021
Messi has definitely accepted PSG contract proposal and will be in Paris in the next hours. pic.twitter.com/DiM5jNzxTA
அதேசமயம், PSG உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னும் சில மணிநேரங்களில் மெஸ்ஸி பாரிஸ் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.