மெஸ்ஸி இனி பார்சிலோனா அணிக்காக விளையாடமாட்டார்! வெளியான அறிவிப்பு: சோகத்தில் ரசிகர்கள்
பிரபல கால்பந்து ஜாம்பவான் ஆன, லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இனி விளையாடமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கும், FC பார்சிலோனா அணிக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், இரு தரப்பினரும் நேற்று, புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட விரும்பினர். ஆனால், அது நடைபெறவில்லை. ஏனெனில், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் (ஸ்பானிஷ் லிகா விதிமுறைகள்) என்று பார்சிலோனா கால்பந்து கிளப் வெளியிட்டுள்ளது.
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
இது குறித்து பார்சிலோனா அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தம் காலாவதியானதால் லியோனல் மெஸ்ஸி தனி வீரர் ஆனார் என்று தெரிவித்துள்ளது.
இதைக் கண்ட பார்சிலோனா ரசிகர்கள் END OF ERA என்று டுவிட் செய்து வருகின்றனர்.