அமெரிக்க வரலாற்றில் தாக்குதலில் பலியான, உயிர்பிழைத்த தலைவர்கள் - விபரம் உள்ளே
அமெரிக்காவில் கடந்த காலங்களில் தாக்குதல்களில் உயிர் தப்பிய ஜனாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் குறித்து இங்கே காண்போம்.
டிரம்ப் மீது தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல நாடுகளின் தலைவர்களும் டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு அமெரிக்க வரலாற்றில் 7 ஜனாதிபதிகள் மீது தாக்குதல் அல்லது கொலை முயற்சி நடந்துள்ளது. ஜனாதிபதிகள் மட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளர்கள் மீதும் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆய்வு அறிக்கை
கடந்த 2008ஆம் ஆண்டில் இதுகுறித்து எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதன்படி அமெரிக்க ஜனாதிபதிகள், வேட்பாளர்கள் மீது நேரடியாக 15 முறை தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 46 பேர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் 13 பேர் (டிரம்ப் இல்லாமல்) மீது கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.
தாக்குதல்களுக்கு ஆளான தலைவர்கள்:
- தியோடர் ரூஸ்வெல்ட் (1912) - தாக்குதல்
- பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (1933) - தாக்குதல்
- ஜெரால்டு ஆர். போர்டு (1975) - இருமுறை துப்பாக்கிச்சூடு
- ரொனால்டு ரீகன் (1981) - துப்பாக்கிச்சூடு
- பில் கிளிண்டன் (1994) - துப்பாக்கிச்சூடு (வெள்ளை மளிகை)
- ஜார்ஜ் டபிள்யூ புஷ் (2005) - கையெறிகுண்டு வீசப்பட்டது, அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை
கொல்லப்பட்ட தலைவர்கள்:
- ஆபிரகாம் லிங்கன் (1865)
- ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881)
- வில்லியம் மெக்கன்சி (1901)
- ஜான் எப். கென்னடி (1963)
1835ஆம் ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்சன் மீது கைத்துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |