அண்ணா, உதவி செய்யுங்கள்: வெளிநாடு ஒன்றில் சிக்கி காலை இழந்து கதறும் இலங்கைத் தமிழர்...

Asylum Seeker Germany
By Balamanuvelan Nov 18, 2022 12:36 PM GMT
Report

சுயலாபத்துக்காக புலம்பெயர்ந்தோரை வைத்து விளையாடும் ஒரு நாட்டின் ஜனாதிபதியால், இரு நாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டதால், காலை இழந்து, ‘அண்ணா, உதவி செய்யுங்கள்’ எனக் கதறும் இலங்கைத் தமிழர்களைக் குறித்த அதிரவைக்கும்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

புலம்பெயர்ந்தோரின் வாழ்வுடன் விளையாடும் பெலாரஸ் நாடு

2020ஆம் ஆண்டு, பெலாரஸ் ஜனாதிபதியான Alexander Lukashenko, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதால், அந்நாட்டின்மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. அதனால் அந்நாடு உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுவது இன்னொரு தனிக்கதை.

ஆக, தன் நாட்டின்மீது தடைகள் விதிக்கப்பட்டதால், தன் நாட்டுக்கு புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் பெலாரஸ் ஜனாதிபதி, அவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தள்ளிவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்.

ஆனால், இது தெரியாத புலம்பெயர்வோர் பலர், பெலாரஸ் தங்களை உண்மையாக வரவேற்பதாக நம்பிக்கொண்டு அங்கு செல்கின்றனர். அவர்களை ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிற்குள் பெலாரஸ் அனுப்ப, அந்த நாடு மீண்டும் அவர்களைத் திருப்பி அனுப்ப, இரண்டு நாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கிறார்கள் புலம்பெயர்வோர் பலர்.

அண்ணா, உதவி செய்யுங்கள்: வெளிநாடு ஒன்றில் சிக்கி காலை இழந்து கதறும் இலங்கைத் தமிழர்... | Lithuania Belarus Migrant Crisis

 PHOTO: LEONID SHCHEGLOV/BELTA/AFP VIA GETTY IMAGES

ஜேர்மனியில் வாழும் இலங்கைத் தமிழருக்கு வந்த தொலைபேசி அழைப்பு

அப்படி சிக்கிய சில இலங்கைத் தமிழர்களைக் குறித்த அதிரவைக்கும் செய்திதான் இது.

ஜேர்மனியில் வாழும் அந்த 37 வயது இலங்கைத் தமிழருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர், அவருடைய மனைவியின் தம்பி. அவருக்கு வயது 25. சட்டச்சிக்கல்கள் கருதி அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அழைத்த 25 வயது இலங்கைத் தமிழர் பெலாரஸ் நாட்டில் படித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது அழைப்பதோ லிதுவேனியா நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து.

நடந்தது என்னவென்றால், அந்த 25 வயது இளைஞர், நூற்றுக்கணக்கான மற்ற புலம்பெயர்வோருடன் பெலாரஸிலிருந்து லிதுவேனியாவுக்குள் நுழைய முற்பட்டபோது இரு நாடுகளின் எல்லைக்கும் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டினர் அடுத்த நாட்டுக்கு அனுப்ப, அந்த நாட்டினர் உள்ளே விடாமல் திருப்பியனுப்ப, பனியில் அலைந்து frostbite என்னும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது சிலருக்கு.


அதன் பிறகு லிதுவேனிய அதிகாரிகள் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அழைத்துச் சென்றாலும், மூன்று நாட்களுக்குப் பிறகுதான் மருத்துவ உதவி கிடைத்ததாம். ஆனால், அந்த 25 வயது இளைஞரின் ஒரு கால் முற்றிலும் பாதிக்கப்பட்டு அவரது காலே அகற்றப்பட்டுவிட்டது, மற்றொரு காலின் ஐந்து விரல்களும் அகற்றப்பட உள்ளன.

ஜேர்மனியில் வாழும் அவரது அக்கா, தன் தம்பிக்கு நேர்ந்த கொடுமையை எண்ணிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் அவரை ஆறுதல்படுத்த அவரது கணவரால் இயலவில்லை.

இதற்கிடையில், அந்த 25 வயது இளைஞர் தங்கியிருக்கும் அதே மருத்துவமனையில் 20 வயதான இலங்கைத் தமிழர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலும் அகற்றப்பட்டுவிட்டது.

ஜேர்மனியிலிருப்பவர் தன் மனைவியின் தம்பியிடம் மொபைலில் பேசும்போதெல்லாம், அந்த 20 வயது இளைஞரும், ‘அண்ணா, உதவி செய்யுங்கள்’ எனக் கதறுகிறாராம்.

இந்த இளவயதில் காலை இழந்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என வருந்தும் ஜேர்மனியில் வாழும் அந்த இலங்கைத் தமிழர், லிதுவேனியாவுக்குச் செல்லத் தயாராகிவருகிறார்.

அவரது ஒரே நோக்கம், எப்படியாவது தன் மனைவியின் தம்பியை ஜேர்மனிக்கு அழைத்து வருவதுதான். ஆனால், அது எந்த அளவுக்கு கடினமானது என்பது தெரியவில்லை.

மேலதிக தகவல்களுக்கு...https://www.vice.com/en/article/7k8qqg/lithuania-belarus-migrant-crisis 

மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US