பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஹாட்ஸ்பாட்கள்! உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்
பிரித்தானியாவில் கொரோனா ஹாட்ஸ்பாட்கள் அதிகரிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் பிரித்தானியாவில் உள்ளூர் ஊரடங்கு விதிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் 28, ஸ்காட்லாந்தில் 4 மற்றும் வடக்கு ஐயர்லாந்தில் 2 என ஹாட்ஸ்பாட்கள் அதிகரித்துள்ளன. \
இந்த திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம் என அரசாங்கத்திற்கு தெரியவில்லை என சுற்றுச்சுழல் செயலாளர் George Eustice கூறியுள்ளார்.
எதனால் இந்த ஹாட்ஸ்பாட்களை அதிகரிக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை, தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத மக்களை குறிப்பிட்ட மாறுபாடு தொற்றியிருக்கலாம்.
அது தான் காரணமா என எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் நாங்கள் நிலைமை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
எங்களால் எதையும் நிராகரிக்க முடியாது. இது கடைசி ஊரடங்காக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் மீண்டும் ஒரு கட்டங்கள் அடிப்படையிலான ஊரடங்கை தவிர்க்க விரும்புகிறோம் என சுற்றுச்சுழல் செயலாளர் George Eustice கூறினார்.