லண்டனில் நடந்து சென்ற நபர் மீது ஸ்ப்ரேவை தெளித்து கீழே தள்ளிவிட்டு நடந்த கொள்ளை முயற்சி! புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டனில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது ஸ்ப்ரேவை தெளித்து தாக்கி அவரின் உடைமைகளை கொள்ளையடிக்க முயன்ற குற்றவாளிகள் குறித்து பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் ஹொல்போர்னில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 13ஆம் திகதி நடந்துள்ளது. மதியம் 11 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 30களில் இருந்த நபர் பின்னால் வந்த மர்ம மனிதன் அவரை பிடித்து இழுத்து முகத்தில் ஏதோ ஒரு ஸ்ப்ரேவை தெளித்துள்ளான்.
இதையடுத்து அவர் தரையில் நிலைதடுமாறி விழுந்த போது மற்றொரு நபர் அங்கு வந்து தன்னை பொலிஸ் அதிகாரி போல காட்டி கொண்டார்.
பின்னர் இருவரும் சேர்ந்து கீழே விழுந்த நபரின் உடமைகளை திருட முயன்ற நிலையில் பின்பு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து கீழே சிறிய காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரின் புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்களை யாருக்காவது அடையாளம் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.