எனக்காக என்ன வைத்திருக்கிறாய்? லண்டன் பேருந்தில் சிறுவன் அருகில் வந்த நபர் செய்த செயல்...புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டன் பேருந்தில் 16 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்தி அவனிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடந்துள்ளது.
அங்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த 16 வயது சிறுவன் அருகில் வந்து உட்கார்ந்த நபர் சிறுவனிடம், எனக்காக என்ன வைத்திருக்கிறாய் என கேட்டான்.
பின்னர் சிறுவன் பாக்கெட்டில் கைவிட்டு திருடன் முயன்றான். ஆனால் சிறுவன் அதை தடுக்கவே அவன் முகத்தில் மர்ம நபர் தொடர்ந்து குத்தினான்.
இதன்பிறகு பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வயது 17ஐ சுற்றி இருக்கலாம் எனவும் அவனின் உஅயரம் 5 அடி 7 அங்குலம் இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று அவன் கருப்பு நிற உடை அணிந்திருந்தான். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
அவன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.