லண்டனில் பயங்கரம்! வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீசிய கொடூரம்: வலியால் துடி துடித்த குடும்பத்தினர்
லண்டனில் வீட்டின் கதவை திறந்த போது, ஆசிட் வீசியதால் மூன்று பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு லண்டனின் Colindale-வில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், நேற்றிரவு 10 வயது மதிக்கத்த குழந்தை, 43 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 36 வயது மதிக்கத்தக்க பெண் வசிக்கும் வீட்டின் கதவை யாரோ ஒருவர் தட்டியுள்ளார்.
இதையடுத்து கதவை வந்து திறந்த போது, அவர்கள் மீது ஆசிட் வீசியதால், இதில் மூன்று பேரும் வலியால் துடித்துடித்துள்ளனர். அதன் பின் இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக பொலிசார் அங்கு விரைந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததுள்ளனர்.
தற்போது மூவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயன்ற போது, அவர்கள் மீது ஆசிட் பட்டதால், அவர்களும் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், அவர்கள் யாருக்கும் எந்த ஒரு மோசமான காயங்கள் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், தாக்குதல் நடந்த வீட்டின் கதவறை திறந்த போது, யாரோ ஒரு மர்ம நபர் திடீரென்று அவர்கள் மீது ஆசிட்டை வீசிவிட்டு சென்றுவிட்டான்.
அவர்களின் சத்தத்தைக் கேட்டே நாங்கள் வெளியில் வந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் இப்படி வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீச்சு நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் சற்று பயத்துடனே உள்ளனர்.