லண்டனில் இந்த பகுதிகளில் 2 பேருக்கு Omicron இருப்பது கண்டுபிடிப்பு! வெளியான எச்சரிக்கை தகவல்
லண்டனில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் இரண்டு பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவில் இரண்டு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின் லண்டனுக்கு வந்த சென்ற நபர் ஒருவருக்கு இந்த வைரஸ் இருப்பது தெரியவந்தது.
ஆனால் அந்த நபர் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், தற்போது லண்டனில் மேலும் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வழக்கு எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்தது கிடையாது. முன்னர் உறுதிபடுத்தப்பட்ட வழக்குகளுடனும் தொடர்பு இல்லை.
இவர்கள் லண்டனில் உள்ள Camden மற்றும் Wandsworth பகுதியை சேர்ந்தவர்கள்.இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர ஸ்காட்லாந்தில் இதன் எண்ணிக்கை 6-ஐ தொட்டுள்ளதால், பிரித்தானியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11-ஐ தொட்டுள்ளது.
UKHSA தலைமை நிர்வாகி Jenny Harries கூறுகையில், வரும் நாட்களில் இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கொரோனா அறிகுறிகள் கொண்ட எவரும் தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், PCR பரிசோதனை செய்து கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.