லண்டனில் இரவுவிடுதியில் இருந்து வெளியே வந்து டாக்ஸி என நினைத்து வேறு காரில் ஏறி சென்ற இளம்பெண்! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்
லண்டனில் இரவுவிடுதியில் இருந்து வெளியில் வந்த பெண்ணை காரில் ஏற்றி சென்று பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் Islingtonல் தான் இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி நடந்துள்ளது. 20களில் உள்ள ஒரு இளம்பெண் இரவுவிடுதிக்கு நண்பருடன் சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு வெளியில் வந்தார்.
பின்னர் தாங்கள் புக் செய்த டாக்ஸி என நம்பி கார் ஒன்றில் இருவரும் ஏறி சென்றனர். ஆனால் கார் ஓட்டுனர் வேறு திசையில் காரை ஓட்டி சென்றதால் இருவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது மது அருந்துகிறீர்களா என கார் ஓட்டுனர் அவர்களிடம் கேட்க இருவரும் மறுத்துள்ளனர், பின்னர் காரில் இருந்து அவர்கள் கீழே இறங்கினார்கள்.
அந்த சமயத்தில் அந்த இளம்பெண்ணை கார் ஓட்டுனர் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது சிசிடிவி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் இருக்கும் நபரிடம் இச்சம்பவம் தொடர்பாக பேசி விசாரிக்க வேண்டும் என கூறும் பொலிசார் அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.