லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தேஜஸ்வினி தொடர்பில் தாயாரின் உருக்கமான தகவல்
லண்டனில் இந்திய மாணவி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது தாயார் கடைசியாக தொலைபேசியில் தம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கண்கலங்கிய தாயார் ரமாதேவி
இந்திய மாநிலம் தெலங்கானாவைச் சேர்ந்த தேஜஸ்வினி ரெட்டி என்பவர் லண்டன் வெம்ப்லி பகுதியில் கடந்த 13ம் திகதி பகல் படுகொலை செய்யப்பட்டார். இதில் பிரேசில் நாட்டவரான 23 வயது இளைஞர் கைதாகியுள்ளார்.
@ugc
தேஜஸ்வினியுடன் தங்கியிருந்த இன்னொரு இந்திய மாணவி அகிலா என்பவரும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், தமது மகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மால் ஏற்கவே முடியவில்லை என அவரது தாயார் ரமாதேவி கண்கலங்கியுள்ளார்.
மகளின் எதிர்காலம் கருதி லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஆனால் இப்படியான ஒரு சூழலை எதிர்கொள்வோம் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள ரமாதேவி, எனது மகளின் உடலை அங்கேயே காக்க வைக்காமல் நல்லபடியாக சீக்கிரம் அனுப்பி வையுங்கள் என கெஞ்சியுள்ளார்.
மேலும், தமக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்படும் என தேஜஸ்வினி ஒருபோதும் கூறவில்லை என குறிப்பிட்டுள்ள ரமாதேவி, அவர் மிகவும் தைரியமானவர், யாரிடமும் சண்டை போடும் பழக்கமும் இல்லாதவர் என தெரிவித்துள்ளார்.
பணத்திற்காக மிரட்டல்
கடைசியாக தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும், பணத்திற்காக மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நடக்கும் எனவும், ஆனால் பணம் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் எனத் தெரிவித்ததாகவும் ரமாதேவி கூறியுள்ளார்.
@bbc
தமது தோழியுடன் தற்போது தங்கியிருக்கும் இடம் தமக்கு பிடித்துப்போயுள்ளதாகவும், லண்டனில் தற்போது வெப்பம் அதிகம் எனவும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் இன்னொரு முறை அழைப்பதாகவும் தேஜஸ்வினி கூறியுள்ளார்.
இதுவே கடைசியாக அவர் பேசிய வார்த்தைகள் என ரமாதேவி கூறியுள்ளார். இதனிடையே, தேஜஸ்வினியின் உடலை இந்தியாவுக்கு எடுத்துவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |