லண்டனில் பாட்டியை காண சென்ற 13 வயது சிறுமியின் நிலை என்ன? கவலையில் குடும்பத்தார்
லண்டனில் பாட்டியை காண சென்ற 13 வயது சிறுமி மாயமாகியுள்ள நிலையில் அது தொடர்பிலான பின்னணி தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
Nellie Smith (13), Horshamல் இருந்து கடந்த 20ஆம் திகதி மாலை 7 மணியளவில் தனது பாட்டியை காண அவர் வீட்டை நோக்கி சென்ற நிலையில் மாயமானார்.
தற்போது வரையில் Nellie கண்டுபிடிக்கப்படாத நிலையில அவர் வடக்கு லண்டனில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். வடக்கு லண்டனின் Barnet, Harrow போன்ற பகுதிகளில் அவர் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதே போல சிறுமி Nellie தனது தாயாரை காணவும் சென்றிருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர். Nellie குறித்து அவர் உறவினர்கள் சிலர் உருக்கமான பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
Roseanna Smithன் பதிவில், Nellie தனது தலையில் கருப்பு சாயம் பூசியிருக்கலாம். 6 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள அவரை யாராவது கண்டால் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும், Nellie பாதுகாப்பு குறித்து குடும்பத்தாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
சிறுமி குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.