லண்டனில் மருத்துவமனை அலட்சியத்தால் திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த நபர்!
லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தனது திருமணத்திற்கு முந்தைய நாள் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமணத்திற்கு முன் உயிரிழப்பு
பிரித்தானியாவில் உள்ள NHS, நாட்டின் அரசாங்கத் துறைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் மூலம் தீர்க்கப்படாத புகார்கள் மீது இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு The Parliamentary and Health Service Ombudsman (PHSO) யிடம் உள்ளது.
PHSO வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 வயதான Andy Shewan மற்றும் 80 வயதான June Richards ஆகிய இருவரும் 40 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019 ஜனவரியில் திருமணம் செய்யவிருந்தனர்.
திருமணத்திற்கு முந்தைய நாள் Andyக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் Whipps Cross University மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்திருக்கிறது. Andy-ஐ மருத்துவமனை நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம், அவர் மரணத்திற்கு மருத்துவமனையின் போக்கு தான் காரணம்.
Google Maps
ஏனெனில் Andy, மருத்துவமனையில் 1 மணி நேரம் தனியாக படுக்க வைக்கப்பட்டதோடு உயிருக்கு போராடிய அவரை 25 நிமிடங்களுக்கு பின்னரே மருத்துவர்கள் வந்து பார்த்துள்ளனர்.
மிகுந்த வலியுடன் மரணம்
அதுவும் அனுபவம் இல்லாத ஜூனியர் மருத்துவர்களே வந்திருக்கின்றனர். மேலும் Juneக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை, அவர் கடைசியாக Andy-ஐ பார்க்ககூட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில், Whipps Cross University CEO மருத்துவமனையின் இந்த தோல்விக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் Juneக்கு £10,000 நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
June கூறுகையில், அவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அவர் மிகுந்த வலியோடு இறந்தார். Andy வீட்டிற்கு வருவார் என்று நினைத்தேன், ஆனால் வரவில்லை.
Andy மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம், அவர் இன்னும் கூட என்னுடன் இருந்திருக்கலாம் என வேதனையுடன் கூறியுள்ளார்.
Stock image / PA Archive