அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்... உயிருடன் தீயில் கருகிய இருவர்: லண்டனில் சம்பவம்
வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன் எரிந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
சம்பவயிடத்திலேயே பலி
தொடர்புடைய கோர சம்பவம் ஞாயிறன்று இரவு சுமார் 10.25 மணியளவில் நடந்துள்ளது. தகவலையடுத்து 6 தீயணைக்கும் வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.
குடியிருப்பின் உள்ளே மீட்கப்பட்ட இருவர், தீயில் சிக்கி சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் தொடர்பில் பொலிசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, 12.22 மணியளவில் தான் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வித்தியாசமான வாசனை உணர்ந்ததை அடுத்தே பலரும் குடியிருப்பின் வெளியே வந்துள்ளனர். இதில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியுள்ளதை கண்டுள்ளனர்.
அலறல் சத்தம்
இதனையடுத்தே சுமார் 9 பேர்கள் 999 இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பலர் அலறல் சத்தம் கேட்டதாலையே, குடியிருப்பில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர்.
சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்தில் திரண்டு, தீயணை அணைக்க போராடினர். தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |