லண்டன் பூங்காவில் பெண்ணை சீரழித்த நபர் இவர் தான்! பொலிசார் வெளியிட்ட புகைப்படங்கள்
பிரித்தானியாவில் லண்டன் பூங்காவில் 50 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் யார் என்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வடக்கு லண்டனின் எட்ஜ்வேரில் உள்ள வாட்லிங் பூங்காவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, குறித்த நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 28-ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பூங்கா வழியாக நடந்து சென்றபோது இந்த கொடூர சம்பவம் கிரெசிங்ஹாம் சாலையில் நடந்தது.
அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அருகில் கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம், குறித்த நபரை பொலிஸார் குற்றவாளி என சந்தேகிக்கின்றனர்.
அந்த மனிதர் கருமையான தலைமுடி கொண்டுள்ளார் மற்றும் பச்சை நிற ஜம்பர் உடை அணிந்திருந்தார் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இரவில் பர்ன்ட் ஓக் டியூப் நிலையம் வழியாக நிறைய பைகளை எடுத்துக்கொண்டு நடக்ந்து சென்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், சாட்சிகள் முன் வருமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த வழக்கை சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் இப்போது விசாரித்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.