லண்டனில் வீடு புகுந்து நடந்த கொடூரம்... விபரீதத்தில் முடிந்த கொள்ளை சம்பவம்: பகீர் பின்னணி
கிழக்கு லண்டனில் வீடு புகுந்து கொள்ளையிட்ட ஐவர் குழு ஒன்று கொலை செய்து தப்பிய சம்பவத்தில், குற்றவாளிகள் என ஓல்டு பெய்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து
கிழக்கு லண்டனின் இல்ஃபோர்ட் பகுதியில் கடந்த 2022 மார்ச் மாதம் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 30 வயதான இம்ரான் இசத் தமது நண்பர்கள் இருவருடன் தொலைக்காட்சி பார்த்தபடி இருந்துள்ளார்.
Image: Met
இந்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஐவர் குழு ஒன்று அந்த குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவமானது உள்ளூர் நேரப்படி 1.15 மணிக்கு நடந்துள்ளது.
கொள்ளையிட வந்தவர்கள் ஐவரையும் இம்ரான் தம்மால் இயன்ற மட்டும் தடுத்துள்ளார். ஆனால், அந்த ஐவரில் ஒருவர் இம்ரானை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இன்னொருவர் இம்ரானின் நண்பர்களை குறிவைத்துள்ளார்.
இதனிடையே, அந்த கொள்ளையர்களின் ஒருவன், கண்டுபிடித்துவிட்டோம், நாம் போகலாம் என தெரிவிக்க, சட்டென்று ஐவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து இம்ரானுக்கு மருத்துவ உதவி அளித்துள்ளனர்.
கொள்ளை சம்பவமானது திட்டமிடப்பட்டது
ஆனால், ஐந்துமுறை கத்தியால் தாக்கப்பட்ட இம்ரான், சம்பவயிடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார். உடற்கூறு ஆய்வில், கத்தியால் தாக்கப்பட்டதில், இம்ரானின் இதயத்தில் காயம்பட்டுள்ளதும், அதுவே மரணத்திற்கு காரணமானதாகவும் தெரிவித்துள்ளனர்.
Image: Met
முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளை சம்பவமானது திட்டமிடப்பட்டது என்றும், பணம் அல்லது போதை மருந்து தொடர்புடையது எனவும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ஜூலை மாதம் தொடர்புடைய ஐவரும் பொலிசாரிடம் சிக்கினர். ஐவரும் விசாரணையில் உண்மையை கூற மறுத்தாலும், அவர்கள் கொள்ளையிட்ட பொருள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
ஆனால் கொலை வழக்கில், அவர்கள் ஐவரும் பல ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |