லண்டனில் ஒரு இடத்திலிருந்து தப்பி தலைமறைவான தமிழர்! அவரை யாரும் அணுகவேண்டாம் என எச்சரித்த பொலிஸ்.. கண்டுபிடிக்கப்பட்டார் என தகவல்
லண்டனில் உள்ள care facilityல் இருந்து தலைமறைவான தமிழர் ஒருவரை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் Ilfordல் உள்ள care facilityல் இருந்து பாலசங்கர் நாராயணன் (35) என்ற இளைஞர் கடந்த 7ஆம் திகதி தப்பி சென்றிருக்கிறார்.
இதற்கு அடுத்த நாளில் இருந்து பொலிசார் நாராயணன் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டனர். அதில், நாராயணன் மூர்க்கத்தனம் கொண்டவராக இருக்கலாம், பொதுமக்கள் அவரை கண்டால் அருகே சென்று அணுக வேண்டாம் என எச்சரித்தனர்.
அதற்கு பதிலாக 999 ஐ அழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆசியரான நாராயணனின் உயரம் 5 அடி 9 அங்குலம் எனவும், சாதாரணமான உடல்வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாலசங்கர் நாராயணனை தேடி கண்டுபிடித்துவிட்டதாக பொலிசார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். அவர் மேற்கு லண்டனில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.