பிபிசி செய்தி ஆசிரியரை தலைதெறிக்க ஓட வைத்த கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ
லண்டலில் உரடங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு வந்த பிபிசி செய்தியாளரை மிரட்டி சாலையில் தலைதெறிக்க விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரித்தானியாவில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்ததை எதிர்த்து லண்டலில் வைட்ஹால் சாலையில் திங்கட்கிழமை, நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பிபிசி நியூஸ்நைட் ஊடகத்தின் அரசியல் செய்தி ஆசிரியரான Nicholas Watt என்பவரை, போராட்டத்தில் ஈடுபட்டா சிலர் 'துரோகி' என்று பிற மோசமான வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்துவதாக மிரட்டியுள்ளனர்.
Nicholas பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளின் எல்லையைத் தாண்டி ஓடுவதற்குள், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை வீதிகளில் துரத்தினர். அதனால் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மெட் பொலிஸ் விசாரணையைத் தொடங்கியது.
இது தொடர்பாக Hertfordshir-ஐ சேர்ந்த Martin Hockridge (57) என்பவரை பொலிஸார் கண்டறிந்து, பொது ஒழுங்கு குற்றத்திற்காக பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் ஜூன் 29-ஆம் திகதி Westminster Magistrates நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.