லண்டனில் வறுமையில் வாடுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் 2 குழந்தைகளின் தந்தை! நெகிழ்ச்சி பின்னணி
லண்டனை சேர்ந்த நபர் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பள்ளி சீருடைகளை ஏற்கனவே வழங்கிய நிலையில் தற்போது 400 க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் பரிசுகளை வறுமையில் உள்ள குழந்தைகளுக்காக சேகரித்துள்ளார்.
Verral Paul-Walcott (35) என்ற மாமனிதரே இந்த நெகிழ்ச்சி உதவிகளை செய்து வருகிறார்.
முதன் முதலில் வறுமையில் வாடிய ஒரு தாயார் Verral-ஐ சந்தித்து தனது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை வழங்க உதவ முடியுமா என கேட்டார். இங்கு தான் அவர் உதவி செய்வதின் தொடக்கபுள்ளி வைக்கப்பட்டது.
Verral கூறுகையில், கடந்தாண்டு லாக்டவுன் சமயத்தில் பலரும் பல்வேறு விதமான சிரமங்களை சந்தித்தார்கள். அப்போது வீடில்லாத பெண்ணொருவரை சந்தித்த போது பசிக்கிறதா என கேட்டேன், ஆமாம் என அவர் கூற உணவு வாங்கி கொடுத்தேன்.
இதோடு குளிரில் நடுங்கிய அவருக்கு கையுறை வாங்கினேன், பின்னர் அவர் ஆனந்த கண்ணீர் விட்டார், அப்போதில் இருந்து யாருக்காவது நம்மால் முடிந்த உதவியை செய்யலாமே என முடிவெடுத்தேன். இதன்பின்னர் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உணவளிப்பது, குழந்தைகளுக்கு சீருடைகள் உள்ளிட்ட தேவையான விடயங்களை வாங்கி தருவது போன்ற செயல்களை செய்கிறேன் என கூறியுள்ளார்.
அவர் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் மூலம் எதையும் செயல்படுத்தவில்லை. JustGiving இணையதள பக்கம் மூலம் நிதி வசூலித்தும் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Verralன் மனைவி மற்றும் குழந்தைகள்