சிறுமிகள் தான் குறி! லண்டனில் தன்னை சிறுவன் போல காட்டிகொண்டு ஓன்லைனில் சிறுமிகளிடம் பழகிய 36 வயது நபர்... எச்சரிக்கை செய்தி
லண்டனில் 12 வயது சிறுமியிடம் 16 வயது சிறுவன் போல பழகி அவரை நேரில் சந்தித்து மோசமாக நடக்க முயன்ற நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பூஷன் செட்ரி (36) என்ற நபர் கடந்தாண்டு இறுதியில் சமூகவலைதளம் மூலம் 12 வயது சிறுமியிடம் நட்பானார்.
அப்போது தன்னை 16 வயது சிறுவன் போல போலியாக காட்டி கொண்டதோடு ஆபாச புகைப்படங்களையும் அனுப்பினார்.
பின்னர் டிசம்பர் 2ஆம் திகதி சிறுமியை நேரில் வரவழைத்து அவருடன் தவறான உறவில் ஈடுபட பூஷன் முயன்ற நிலையில் லண்டனின் துரோக்கில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பொலிசாருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்த நிலையில் அங்கு சுற்றிவளைத்து பூஷனை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி பூஷனுக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டிலும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. இது குறித்து விசாரணை அதிகாரி ஆடம் கூறுகையில், நல்லவேளையாக பூஷனால் நேரடியாக எந்தவொரு சிறாரும் பாதிக்கப்படையவில்லை.
அதற்குள்ளாக அவனை கைது செய்துவிட்டோம். சிறுமிகளையே அவன் குறி வைத்து பழகியுள்ளான்.
ஓன்லைனில் நீங்கள் சந்திக்கும் அனைவருமே உண்மையான நபர்கள் கிடையாது என்பதையும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது என கூறியுள்ளார்.