லண்டனில் கர்ப்பிணி பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர் செய்த பகீர் செயல்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி
லண்டனில் கர்ப்பிணி பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், அவரது முகத்திலேயே கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் குற்றவாளி தனது குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டார்.
குறித்த சம்பவம் வடக்கு லண்டனில் உள்ள ஒரு தெருவில், கடந்த மார்ச் 18-ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் நடந்துள்ளது.
அப்பெண் தாக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. அதனை வைத்து, தாக்குதலில் ஈடுபட்டவர் Tottenham-ஐ சேர்ந்த 59 வயதாகும் Keith Gowers என்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர். அவர் அடுத்த நான்கு நாட்களில் மார்ச் 22-ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அந்த வீடியோ காட்சியில், Keith அப்பெண்ணை தலையணை உறையால் தலையை மூடி, முகத்தில் சரமாரியாக குத்துவது தெரிகிறது.
இதில், 6 மாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உதடு கிழிந்தது மட்டுமல்லாமல், அவரது கை கட்டை விறல் காயமடைந்து. மேலும் அவர் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடி நொறுங்கியது.
இந்த சம்பவம் குறித்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 10) தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, Keith தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், வரும் ஆக்டொபர் 10-ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.