பிரித்தானியா தலைநகரின் நிலை குறித்து பொது சுகாதார பிராந்திய இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானியா தலைநகர் லண்டனின் நிலை குறித்து பொது சுகாதார பிராந்திய இயக்குனர் பேராசிரியர் Kevin Fenton முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
லண்டன் ஒமிக்ரான் அலையின் உச்சத்தை கடந்திருக்கலாம் என்று பொது சுகாதார பிராந்திய இயக்குனரும், பேராசிரியருமான Kevin Fenton தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தரவுகளின் அடிப்படையில், புத்தாண்டு காலத்தில் லண்டனில் ஒமிக்ரான் அலை உச்சமடைந்திருக்கலாம்.
நோய்த்தொற்று அளவுகள் மிக மிக அதிகமாக இருந்தாலும், நகரின் ஒட்டுமொத்த வழக்கு விகிதங்களில் குறைந்துள்ளது.
இந்த நெருக்கடியான கட்டத்திலிருந்து நாம் இன்னும் வெளியேறவில்லை, ஆனால் உச்சத்தைத் தாண்டிவிட்டோம் Kevin Fenton கூறியுள்ளார்.