லண்டனில் பிள்ளைகள் முன்னிலையில் இளம் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்: அம்பலமான பின்னணி
லண்டனில் பொறாமை கொண்ட கணவனால் பிள்ளைகள் முன்னிலையில் தாயார் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதன் பின்னணி வெளியாகியுள்ளது.
கழுத்தை நெரித்துக் கொலை
தமது இளம் வயது மனைவி, சம வயது இன்னொரு ஆணுடன் தொடர்பில் உள்ளார் என்பதை கண்டறிந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி இரவு கிழக்கு லண்டனின் Docklands பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்து 24 வயதேயான சுமா பேகம் என்பவரை அவரது கணவர் 47 வயது அமினன் ரஹ்மான் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் திணித்து லியா நதியில் வீசியுள்ளார். ஆனால், சூட்கேஸில் திணித்து சுமா பேகத்தின் உடலை நதியில் வீசும் போது அவர் உயிருடன் இருந்தாரா இல்லை, மரணமடைந்திருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றே விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுமா பேகத்தின் சடலம் 10 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது. தமது மனைவியை துன்புறுத்தும் போது அவரது காதலனான 24 வயது ஷாஹின் மியா என்பவரை ரஹ்மான் காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மியா தெரிவிக்கையில், சுமா பேகத்துடனான உறவில் இருந்து விலகிச் செல்ல தமக்கு 6,000 பவுண்டுகள் வரையில் நிதியளிக்க ரஹ்மான் முன்வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மானுக்கும் சுமா பேகத்திற்குமான திருமணம் என்பது தொலைபேசி ஊடாகவே நடந்துள்ளது. இதனையடுத்து 2020ல் சுமா பேகம் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
ஒருமுறைகூட நேரில் சந்திக்கவில்லை
சுமா பேகம் இறக்கும் போது அவரது பிள்ளைகள் இருவருக்கும் 2 வயது மற்றும் 4 மாதங்கள் என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மியா தெரிவிக்கையில், டிக்டாக் செயலி ஊடாக சுமா பேகத்தை சந்தித்தபோது தான் பங்களாதேஷில் வசித்து வந்ததாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்திக்கவில்லை என்ற போதும், இருவரும் நெருக்கமாக உறவை ஏற்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் நட்பாக பழகி வந்ததாகவும், பின்னர் காதலித்ததாகவும்,
ஆனால் 7 அல்லது 8 மாதங்களுக்கு பின்னர் தான், சுமா பேகம் திருமணமானவர் என்பது தமக்கு தெரிய வந்துள்ளதாக மியா தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் எதிர்காலத்தில் இணைந்து வாழ்வது தொடர்பில் திட்டமிட்டதாகவும், லண்டனுக்கு தம்மை சுமா பேகம் அழைத்துள்ளதையும் மியா நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிறகு, சுமா பேகம் லீட்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதும், அப்போது அவர் ரஹ்மானுடன் ஒன்றாக வாழவில்லை என்பதையும் தெரிந்துகொண்டதாக மியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2023 பிப்ரவரி 6ம் திகதி மதியம் சுமா பேகத்தின் குடியிருப்புக்கு சென்ற ரஹ்மான் முதல்முறையாக கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். இதை சுமா காணொளி ஊடாக மியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் ஏப்ரல் 29ம் திகதி இரவு சுமா பேகம் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |