பிரித்தானியாவில் அதிகரிக்கும் Omicron! லண்டனில் அதிகபட்ச பாதிப்புகள் உறுதி
பிரித்தானிய தலைநகர் லண்டனில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக இதுவரை 15 பேருக்கு Omicron வகை கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, லண்டனில் கடந்த ஒரு வாரத்தில் 37,000 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று ஒரே நாளில் 6,901 கோவிட் பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன. இது இந்த ஆண்டு ஜூலை 20-ஆம் திகதிக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியதாக நம்பப்படும் Omicron வகை கொரோனா வைரஸால், இப்போது பிரித்தானியாவில் 42 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன.
அதில் அதிகபட்சமாக லண்டனில் மட்டும் 15 பேருக்கு Omicron தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டரில் 3, பார்னெட், கேம்டன் மற்றும் லூயிஷாமில் 2, பெக்ஸ்லி, ஹாரிங்கி, லாம்பெத், நியூஹாம், சுட்டன் மற்றும் வாண்ட்ஸ்வொர்த்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி லண்டன் மருத்துவமனைகளில் 1,083 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர், 181 பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர்.
லண்டனில் உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 105-ஆக இருந்தது.
Omicron தொற்று தற்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை ஓரளவிற்கு தவிர்க்கக்கூடியது மற்றும் டெல்டாவை விட விரைவாக பரவக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் தலைவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடுமாறு மக்களை வலியுறுத்துகின்றனர்.