லண்டனில் கற்கள் வீசி நொறுக்கப்பட்ட வீட்டு ஜன்னல்கள்! நடந்தது என்ன? சிசிடிவி புகைப்படத்துடன் முழு தகவல்
லண்டனில் வீட்டு ஜன்னல் மீது கற்கள் வீசி நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு லண்டனில் உள்ள லண்டன் கோல்னியில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 31ஆம் திகதி நடந்துள்ளது.
குறித்த நாளில் மாலை 6 மணியளவில் அங்குள்ள ஒரு வீட்டு ஜன்னல் மீது யாரோ கற்களை வேகமாக வீசிய நிலையில் அது சுக்குநூறாக நொறுங்கியது.
இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் விசாரித்தால் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என பொலிசார் கருதுகின்றனர். அந்த நபர் குறித்து யாருக்காவது அடையாளம் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.